என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும்- சட்டசபையில் அமைச்சர் தகவல்
    X

    மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும்- சட்டசபையில் அமைச்சர் தகவல்

    • மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
    • ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.

    சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள மீனாட்சி சொக்க நாதர் மற்றும் ஞானதண்டாயுத பாணி சுவாமி கோவிலுக்கு புதிய ராஜகோபுரம் கட்ட அரசு நடவடிக்கை மேற் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. மூன்று கால விமானம், சன்னதி என ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திட்டபணிகள் மேற்கொள்ள பாலாலயம் தொடங்கப்பட உள்ளது.

    ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. தொடர் நடவடிக்கையாக அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் ராஜகோபுரம் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×