என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அவதூறு பேச்சின் பிறப்பிடமே தி.மு.க. தான் - சீமான்
- ஜெயலலிதா இருக்கும் மேடைகளில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.
- கர்ம வீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என பேசியவர் கருணாநிதி.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலை உருவாக்கியது அதிமுக.
* ஜெயலலிதா இருக்கும் மேடைகளில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. கலைஞர் குறித்து அதிமுக பல வருடங்களாக பாடிய பாடலைத்தான் நாங்கள் பாடினோம்.
* கலைஞர் தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலுக்கும் நாம் தமிழருக்கும் தொடர்பு இல்லை.
* அந்த பாடலை எழுதி வெளியிட்டது அதிமுக தான். அப்போதெல்லாம் எங்கே போனீர்கள், இப்போது என்னை கேள்வி எழுப்புகிறீர்கள்?
* அவதூறாக பேசுவதற்கு பிறப்பிடமே திமுக கட்சி தான்.
* கர்ம வீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என பேசியவர் கருணாநிதி.
* எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என திமுகவினர் பேசி உள்ள வரலாறு உண்டு.
* திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் பெண்களை இழிவுபடுத்தி உள்ளனர் என்று கூறினார்.






