search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை: மேலும் 2 வீடுகளில் திருட்டு முயற்சி
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை: மேலும் 2 வீடுகளில் திருட்டு முயற்சி

    • மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் மற்றும் 2¾ பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • காவல் துறையினர் 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் கதிர்வேல். நேற்று நள்ளிரவு கதிர்வேலும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் மற்றும் 2¾ பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து கதிர்வேலின் தம்பி கண்ணனது வீடும் அருகிலேயே இருந்துள்ளதால் அந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர் .

    அங்கு எதுவும் கிடைக்காத காரணத்தினால் அருகில் உள்ள முன்னாள் ராணுவ வீரரும், தற்போது பவர் கிரேடில் பணிபுரிந்து வருபவருமான பீட்டர் என்பவரின் வீட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பீட்டர் இரவு பணிக்காக சென்றிருந்த நிலையில் அவரது மனைவி கிறிஸ்டி விமலா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது கதவை உடைக்கும் சத்தம் கேட்கவே அவர் எழுந்து கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் விடாது கதவை உடைக்க முயற்சி செய்த மர்ம நபர் அவர் வெளி லைட்டை போட்டு விட்டு அருகில் உள்ளவர்களுக்கு போனில் தகவல் சொல்வதை கேட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் தலைமையிலான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புராஜ், நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், முதல்நிலை தலைமை காவலர் சுரேஷ், ஆகியோர் 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×