search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஸ்சில் இடம் பிடிக்க ஓடிய பெண்ணின் கால் நசுங்கியது- பஸ் டயர் ஏறி விபத்து
    X

    பஸ்சில் இடம் பிடிக்க ஓடிய பெண்ணின் கால் நசுங்கியது- பஸ் டயர் ஏறி விபத்து

    • அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் ராணி (50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் கோத்தகிரி செல்வதற்காக நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சென்றார். பள்ளிகளின் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்க உள்ள நிலையில் கோத்தகிரி, ஊட்டி செல்வதற்காக ஏராளமான பயணிகள் பஸ்நிலையத்தில் குவிந்திருந்தனர்.

    இதனால் பஸ்சில் இடம் கிடைக்காமல் ராணி நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது கோத்தகிரியில் இருந்து வந்த அரசு பஸ் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் பஸ்சை டிராக்கில் நிறுத்துவதற்காக டிரைவர் முயன்றார்.

    அந்த நேரத்தில் ராணி பஸ்சின் பின்புற சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் இடம் பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ராணியின் காலில் ஏறி இறங்கியதில் கால் நசுங்கியது. இதனால் ராணி வேதனையில் அலறி துடித்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் ராணி அனுமதிக்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×