என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

(கோப்பு படம்)
அணி வகுப்புக்காக, ஆர்.எஸ்.எஸ்.விண்ணப்பித்தால் பரிசீலிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

- வழக்கின் மனு தொடர்பான நகல்களை பெற்று விளக்கம் அளிப்பதாக காவல்துறை தகவல்.
- ஆர்எஸ்எஸ் தரப்பு மனுவிற்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் சுற்றுச் சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பின்னர் அதில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட தேதிகளில் அனுமதி வழங்குவதாக காவல்துறை கூறினால் அதை ஏற்க தயார் என்றும் வாதிடப்பட்டது-
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின் மனு தொடர்பான நகல்கள் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என்பதால், அதை பெற்று விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், மனுவின் நகலை அரசு தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டனர்.
மேலும் அந்த மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அப்போது ஜனவரி 22 மற்றும் 29ந் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பித்தால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 5ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
