search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.-அ.தி.மு.க. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: ஜி.கே.வாசன்
    X

    தி.மு.க.-அ.தி.மு.க. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: ஜி.கே.வாசன்

    • தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
    • தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தாராபுரம்:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழை வளர்த்து வருகிறார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைக் காக்க பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியவர் மோடி. எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு செய்துள்ளார்.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் நிறைய நிலுவைப்பணி இருக்கிறது. சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையாக சரி செய்யவில்லை. இந்த தொகுதி மேலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற வேண்டும். உயர வேண்டும். பாராளுமன்ற தொகுதி மென்மேலும் அனைத்து துறையிலும் உயர வேண்டும். அதற்கு நீங்கள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு செய்யும் தொகை உயர்வு என தி.மு.க.வின் கஜானாவை நிரப்பி கொள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.

    தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×