search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது: பிரேமலதா விஜயகாந்த்
    X

    தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது: பிரேமலதா விஜயகாந்த்

    • நான் விஜயகாந்த் இல்லாமல் பொது செயலாளராகவும் வந்து உள்ளேன். கூட்டணி தர்மத்தை மதிக்க வந்துள்ளேன்.
    • தொப்பூர் மேம்பாலம் ரூ.770கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதியாக கொண்டு வருவோம்.

    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

    தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் மற்றும் நல்லம் பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து தே.மு.தி.க. பொது செயலாளர் பிரமேலதா திறந்தவெளி வேனில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்களிடையே பிரேமலதா பேசியதாவது:-

    எடப்படி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் பொது செயலாராகவும், நான் விஜயகாந்த் இல்லாமல் பொது செயலாளராகவும் வந்து உள்ளேன். கூட்டணி தர்மத்தை மதிக்க வந்துள்ளேன்.

    எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்.ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் போல விஜயகாந்த் பெயரில் வாழ்நாள் முழுவதும் விஜயகாந்த் நினைவிடத்தில் உணவு அளித்து வருகிறோம். விஜயகாந்த் நினைவு இடத்தில் தினந்தோறும் அன்னதானம் செய்து வருகிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விஜயகாந்தின் ஆசையை நிறைவேற்றியே தீருவோம்.

    தொப்பூர் மேம்பாலம் ரூ.770கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதியாக கொண்டு வருவோம். தொடர் உயிர் சேதங்களை தடுக்க டெல்லியில் குரல் கொடுப்போம். ஒகேனக்கல் காவிரி உபரி நீர்திட்டம் உறுதியாக நிறைவேற்றி தருவோம்.

    தருமபுரி மொரப்பூர் ரெயில் பாதை திட்டம் உறுதியாக பெறுவோம். தருமபுரி மாவட்டம் வறண்ட பூமியாக உள்ளது. அதனை கலைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். நெல் மூட்கைள் பாதுகாக்க உறுதியாக கிடங்குகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்போம்.

    தி.மு.க. அறிவித்த எந்த திட்டமாவது நிறைவேற்றியுள்ளதா? நீட் தேர்வு ரத்து, நகை கடன் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி என எதுவும் செய்யவில்லை. அனைவருக்கும் வேலை வாய்பபை தந்தார்களா? இல்லை. மாறாக விலைவாசி, மின் கட்டணம் உயர்த்தியுள்ளனர். தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்துள்ளனர்.

    லாட்டரி விற்பனை, பாலியல் வன்கொடுமை அனைத்தும் இங்கு நடக்கிறது. தமிழகத்தில் எல்லா இடத்திலும் கஞ்சா நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதனை தடுக்க நீங்கள் அளிக்கும் ஒற்றை ஓட்டில்தான் மாற்ற முடியும்.

    தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். 40 தொகுதிகளிலும் கூட்டணி தர்மத்தோடு சரித்திர சாதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாசை ஆதரித்து, ஓசூர் ராம் நகரில், தே.மு.தி.க. பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரின் ஆசியுடன் அமைக்கப்பட்டுள்ள எங்கள் கூட்டணி, வெற்றிக்கூட்டணி, ராசியான கூட்டணி ஆகும். மக்கள் நலனுக்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்று, தமிழகத்தில் டாஸ்மாக், பெருகிவிட்ட கஞ்சா விற்பனை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை அதிகரித்து, போதை தமிழகமாக மாற்றிய பெருமை, ஆளும் தி.மு.க. அரசின் வரலாறாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்ற நிலையை மாற்றி இந்த தமிழகத்தை மக்களுக்கான தமிழகமாக நிச்சயம் மாற்றிக் காட்டு வோம். ஜிஎஸ்டி வரி விதிப்பால், அனைத்து வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யை திரும்ப பெற, டெல்லியில் குரல் கொடுப்போம்.

    தேர்தலுக்கு முன்பு, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்கின்றனர். அப்படியானால் தகுதிவாய்ந்த பெண்கள் யார்? மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்து நிச்சயமாக போராடும். அ.தி.மு.க. தலைமையிலான இந்த ராசிக் கூட்டணி, 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

    Next Story
    ×