என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கட்டாய திருமணம் செய்து வைத்து பாலியல் தொல்லை: கணவருடன் சேர்ந்து வாழ வீடு, 50 பவுன் நகைகள் கேட்டு சித்ரவதை
    X

    கட்டாய திருமணம் செய்து வைத்து பாலியல் தொல்லை: கணவருடன் சேர்ந்து வாழ வீடு, 50 பவுன் நகைகள் கேட்டு சித்ரவதை

    • எனக்கு 18 வயது முடிந்ததுபோல் போலி பிறப்பு சான்றிதழும் தயாரித்தனர்.
    • விசாரணை நடத்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.

    நாகர்கோவில்:

    நெல்லை பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் முதலிய நகரை சேர்ந்தவர் சக்தி (வயது 20). இவர், நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது தாய் ராசாத்தியை தந்தை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நானும், எனது தாயும் பாளை வி.எம். சத்திரத்தில் வசித்து வந்தோம். எனது தாய் சமையல் வேலை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். நான் காயல் பட்டணத்தில் உள்ள பள்ளியில் 2020-ம் ஆண்டு பிளஸ்-1 படித்து கொண்டிருந்தேன்.

    கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டதால் தாயுடன் வீட்டில் இருந்து வந்தேன். அப்போது குமரி மாவட்டம் முப்பந்தலைச் சேர்ந்த மாடசாமி-பாப்பா ஆகியோர் எனது தாய்க்கு புதுச்சேரியில் தங்கி பார்க்க வேலை வாங்கி கொடுத்தனர். என்னை பாப்பாவின் மகள் இந்துமதியுடன் அனுப்பி வைத்தார்.

    இந்துமதி மற்றும் அவரது கணவர் அருள்ராஜுடன் முப்பந்தலில் உள்ள அவர்களது வீட்டில் நான் தங்கியிருந்தேன். அப்போது எனது தாய்க்கு தெரியாமல் அவர்களது உறவினரான விஜய் என்பவருக்கு வலுக் கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணத்திற்கு பிறகு விஜய் என்னை தாக்கி கட்டாயப் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் நான் கருவுற்றேன். அதன் பிறகும் என்னை அடித்து துன்புறுத்தியபடி இருந்தார். நான், மைனர் பெண்ணாக இருந்ததால் எனது கணவர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

    அதற்காக எனக்கு 18 வயது முடிந்ததுபோல் போலி பிறப்பு சான்றிதழும் தயாரித்தனர். இந்நிலையில் எனக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து 50 பவுன் நகைகள், வீடு வாங்கி வருமாறு கணவரின் குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று நெல்லையில் உள்ள எனது தாய் வீட்டில் விட்டுச் சென்றனர்.

    மைனர் பெண் என்று தெரிந்தும் என்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, ஆவண முறைகேடு செய்து, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த எனது கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அந்த மனு மீது விசாரணை நடத்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாய்லெட்சுமி விசாரணை நடத்தி 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×