search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈபிஎஸ்-க்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக வழக்கு
    X

    ஈபிஎஸ்-க்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக வழக்கு

    • ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
    • திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க கோரிக்கை.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீது சென்னை மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    மனுவில், போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×