search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெங்கு காய்ச்சல் பரவல்... இன்னும் 2 வாரங்கள் கவனமாக இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள்
    X

    டெங்கு காய்ச்சல் பரவல்... இன்னும் 2 வாரங்கள் கவனமாக இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள்

    • குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.
    • வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் இறந்துள்ளனர்.

    இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த 8-ந்தேதி வரை 461 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு பருவமழை இந்த மாதமும் பெய்யும் என்பதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் என்றும், இன்னும் 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை. மேலும் தற்போது குளிர்காலமும் தொடங்கி விட்டது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் 2 வாரங்கள் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.

    மேலும் குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். சுவாச பிரச்சனைகள் மற்றும் நிமோனியா காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். நன்கு காய்ச்சிய வெந்நீரை குடிக்க வேண்டும். வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×