search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குஷ்பு வீட்டு முன்பு போராட்டம்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் உள்பட 140 பேர் மீது வழக்கு
    X

    குஷ்பு வீட்டு முன்பு போராட்டம்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் உள்பட 140 பேர் மீது வழக்கு

    • போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
    • குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு 'சேரி' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறி விட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி எஸ்.சி. துறை சார்பில் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாந்தோம் பிரதான சாலையில் உள்ள குஷ்பு வீட்டின் முன்பு எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் குஷ்புவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் குஷ்பு வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன்குமார் உள்பட 140 பேர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×