search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொண்டர்கள் வருகையால் களைகட்டும் காங்கிரஸ் அலுவலகம்
    X

    தொண்டர்கள் வருகையால் களைகட்டும் காங்கிரஸ் அலுவலகம்

    • காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
    • சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகங்களும் பரபரப்பாக காணப்படுகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற காரணங்களுக்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாகி உள்ளது. காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவராக கு.செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சி நிர்வாகிகள் வருகை அதிகரித்தன. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    தலித் சமூகத்தை சேர்ந்தவர் தமிழக தலைவராக இருப்பதோடு மட்டுமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தில் அவர் செயல்படுவதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவனுக்கு வருகின்றனர்.

    மேலும் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து வருவதால் பத்திரிக்கையாளர் கூட்டமும் தினமும் அங்கு காணப்படுகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் வருகை அதிகரிப்பால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் களை கட்டியுள்ளது.

    Next Story
    ×