என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இனியும் சிலிண்டர் வெடிப்பு என்று திமுக அரசு சொல்ல முடியாது... என்ஐஏ தகவலை மேற்கோள் காட்டி அண்ணாமலை ட்வீட்
- சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- கோயம்புத்தூர் மக்கள் கடவுளின் கருணையால் காப்பாற்றப்பட்டதாக அண்ணாமலை தகவல்
சென்னை:
கோவையில் கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, 6 பேர் உபா சட்டத்தின்கீழ் (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக பாஜக கடந்த 2 வாரங்களாக கூறுவதை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செய்திக்குறிப்பு இன்று மீண்டும் உறுதிப்படுத்தியது. எனவே, திமுக அரசு இனியும் இதை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்ல முடியாது. பயங்கரவாதி மரணமடைந்த இந்த விபத்து ஒரு தெளிவான 'தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம்'. இந்த சம்பவத்தை "வெடிகுண்டு வெடிப்பு வழக்கு" என்று என்ஐஏ கூறியுள்ளது.
சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜமேஷா முபினுடன் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக வாகனங்களில் கொண்டு செல்லும் வெடிகுண்டுகளை தயாரிக்க சதி செய்ததாக என்ஐஏ இன்று உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் 43 இடங்களில் என்ஐஏ நடத்திய இன்றைய சோதனைகள், நெட்வொர்க் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இயங்கியது என்பதை காட்டுகிறது. கோயம்புத்தூர் மக்கள் கடவுளின் கருணையால் காப்பாற்றப்பட்டனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்