என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு
    X

    மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

    • வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
    • தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இரண்டு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வந்தார்.

    இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வாகைகுளம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்றார்.

    அங்கு வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் குறிஞ்சி நகர் டவர் பகுதியை பார்வையிட்டார். இதனை முடித்து கொண்டு மறவன் மடம் ஊராட்சி அந்தோணியார்புரம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது வெள்ள பாதிப்பு குறித்தும், சேதங்கள் குறித்தும் பொதுமக்கள் மீட்கப்பட்டது குறித்தும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கி கூறினர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தில் சிக்கி உள்ள மற்றவர்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அரசு அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×