search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களிப்பதற்காக எஸ்ஐஇடி மகளிர் கல்லூரிக்கு வருகை தந்தார்.

    பின்னர், வரிசையில் காத்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் வாக்குச்சாவடிக்குள் சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    Next Story
    ×