search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைந்தகரையில் பா.ஜனதா தலைமை தேர்தல் அலுவலகம் 5-ந்தேதி திறப்பு இரவு பகலாக பணிகள் தீவிரம்
    X

    அமைந்தகரையில் பா.ஜனதா தலைமை தேர்தல் அலுவலகம் 5-ந்தேதி திறப்பு இரவு பகலாக பணிகள் தீவிரம்

    • இதுவரை தென்சென்னை, வடசென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது.
    • பணிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை யொட்டி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகம் திறக்க டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இதுவரை தென்சென்னை, வடசென்னை, திருநெல் வேலி ஆகிய தொகு திகளில் திறக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பா.ஜனதா தலைமைதேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைக்கப்படுகிறது.

    தலைவர் அறை, முக்கிய நிர்வாகிகள் அறை, கூட்ட அரங்கம், 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறை ஒவ்வொரு அறையிலும் தனி போன் எண், இணையதள வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

    பணிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளார்கள். வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    வருகிற 5-ந்தேதி மாநில தலைவர் அண்ணாமலை இந்த தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை கட்சி பணிகள் அனைத்தும் இந்த அலுவலகத்திலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×