search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கி முறைகேடு வழக்கு: சிபிஐ அதிகாரிகள் சென்னையில் சோதனை
    X

    வங்கி முறைகேடு வழக்கு: சிபிஐ அதிகாரிகள் சென்னையில் சோதனை

    • ஹிமேஷ் என்பவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
    • வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சூளைமேடு பஜனை கோவில் இரண்டாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் ஹிமேஷ் என்பவரது வீட்டில் 5 சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 8.30 மணியில் இருந்து சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீட்டில் 6 மாதங்களாக வசித்து வரும் வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி அவரது மனைவி உமா சங்கரி வீட்டில் சி.பி.ஐ. 6 அதிகாரிகள் பலர் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×