search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பேத்கர் புகைப்படம் விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்பு- ஐகோர்ட் தலைமை நீதிபதி
    X

    அம்பேத்கர் புகைப்படம் விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்பு- ஐகோர்ட் தலைமை நீதிபதி

    • அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
    • நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.

    அப்போது, அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை அமைச்சர் ரகுபதி கடிதமாக வழங்கினார்.

    பேச்சுவார்த்தையின்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

    மேலும், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×