என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஒன்று சேர்ந்தால் தமிழகத்திற்கு நல்லது- பூவை ஜெகன் மூர்த்தி
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
- 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கஸ்பாவில் நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் புரட்சி பாரத கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதையடுத்து எங்கள் கட்சி உயர் மட்டக்குழுவை கூட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஏன் இந்த பின்னடைவு என்பதை கூட்டணி கட்சி தலைமையும் ஆலோசிக்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருக்கிற இந்தியா கூட்டணி வலுவாக இருந்த காரணத்தால் இந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு வந்திருக்கிறது.
இது தொடரும் என்று சொல்ல முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
ஒரு சில குழப்பங்களால் அ.தி.மு.க பிரிந்திருக்கிறது. அது, ஒன்று சேர்ந்தால் எப்படிப்பட்ட கட்சியையும் வீழ்த்துவார்கள். ஜெயலலிதா இருந்தபோது எதிரிகளே இல்லாத நிலை இருந்தது.
இப்போது எதிரிகள் வளர்ந்து விட்டனர். இதற்கு அ.தி.மு.க பிரிந்து இருப்பதே காரணம். அ.தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்தால் தமிழகத்துக்கு நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.






