search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநாட்டு திடலில் சுடச்சுட உணவு... தொண்டர்கள் மகிழ்ச்சி

    • தொண்டர்களுக்காக புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு வகைகள் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்டது.
    • தொண்டர்கள் பலர் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றதை காண முடிந்தது.

    மதுரை:

    மாநாட்டு திடலில் நேற்று இரவு முதல் தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. தொண்டர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் உணவை வாங்கி சென்றனர்.

    தொண்டர்களுக்காக புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு வகைகள் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக தொண்டர்கள் வந்துகொண்டே இருந்தபோதும் உணவு பரிமாறும் குழுவினர் உணவுகளை பரிமாறிக்கொண்டே இருந்தனர். இந்த ஏற்பாடுகளை பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் உணவுகளை வாங்கி சென்று சாப்பிட்டனர்.

    தொண்டர்கள் பலர் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றதை காண முடிந்தது. தொடர்ந்து சமையல் பணிகளும், உணவு பரிமாறும் பணிகளும் நடந்து கொண்டே இருந்தது.

    Next Story
    ×