search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 58 மின்சார ரெயில்கள் ரத்து
    X

    சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 58 மின்சார ரெயில்கள் ரத்து

    • சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று 8 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30, 9.15, 10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று (சனிக்கிழமை) 8 ரெயில்களும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 58 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இதேபோல, நாளை அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு காலை 4 மணி, 5.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சென்னை மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 5 மணி, 5.40, 6.15, 7.45, 8.05, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கமாக திருவள்ளூரிலிருந்து மூர்மார்கெட்டிற்கு காலை 4.45, 5.55, 8.05, 8.20, 8.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு காலை 5.15, 6.20, 7.15, 7.30 ஆகிய நேரங்களில் புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக பட்டாபிராமிலிருந்து மூர்மார்கெட்டிற்கு காலை 5.30, 6.35, 7.40, 8.40, 8.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்திற்கு காலை 5.30, மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 5.40, மூர்மார்கெட்டிலிருந்து திருத்தணிக்கு காலை 5.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து ஆவடிக்கு காலை 6.50, 8.10 மணிக்கு புறப்படும் ரெயில், மறுமார்க்கமாக ஆவடியிலிருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 5.55, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்தாகிறது.

    பயணிகளின் வசதிக்காக நாளை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்திற்கு காலை 6.30, 7 மணி, 8.20, 9.10, 9.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30, 9.15, 10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×