search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பராமரிப்பு பணி எதிரொலி: நாளை மறுதினம் 44 மின்சார ரெயில்கள் ரத்து
    X

    பராமரிப்பு பணி எதிரொலி: நாளை மறுதினம் 44 மின்சார ரெயில்கள் ரத்து

    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து 4 வாரங்கள் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரெயில்கள் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×