search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரியில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்
    X

    சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    பொன்னேரியில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    • அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற வருகிறார்கள்.
    • தடபெரும்பாக்கம் ஊராட்சியில் 3 பேருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொன்னேரி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற வருகிறார்கள்.

    தடபெரும்பாக்கம் ஊராட்சியில் 3 பேருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீஞ்சூர் வட்டார மருத்துவமனை சார்பில் 40 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 10 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×