என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
அவனியாபுரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்29 May 2022 5:14 AM GMT (Updated: 29 May 2022 5:14 AM GMT)
அவனியாபுரத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்த முருகேசன் (வயது56), ரமேஷ் (55) ஆகிய 2 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் முருகேசன், ரமேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி முருகேசன், ரமேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்த முருகேசன் (வயது56), ரமேஷ் (55) ஆகிய 2 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் முருகேசன், ரமேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி முருகேசன், ரமேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X