என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ஆயுள் உரிமமாக்க பரிசீலனை- விக்கிரமராஜா வரவேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்ஏ.எம். விக்கிரம ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீண்ட நாட்களாக உணவுப் பொருள் வணிகத்தில் இருக்கும் மளிகை கடைகள், உணவகங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றிற்கான உணவுப்பாது காப்புத்துறை உரிமம் ஒரு முறை எடுத்தால் மட்டுமே போதும் என பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கை அளித்து வலியுறுத்தி வந்தது.
அதன் விளைவாக, உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம் ஆயுள் உரிமமாக மாற்றிட பரிசீலனையில் இருப்பதாக தெரியவருகிறது. அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இதுமட்டும் அல்லாது வணிகத்திற்கான உரிமங்களும் ஒற்றைச்சாளர முறையில் ஓரிடத்திலேயே, ஒருமுறையிலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்து வணிக உரிமம் எடுப்பதை எளிமைப் படுத்திட பேரமைப்பு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
