search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மேலூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை

    மேலூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மேலூர் சந்தைப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் செல்போன் கடை, பழைய இரும்பு கடை, ஒர்க் ஷாப், ஸ்டூடியோ, பெட்டிக்கடை ஆகியவை இயங்கி வருகின்றன.

    இந்த வணிக வளாகத் தில் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ரஜாக் மகன் ஜஹாங்கீர் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

    பாலமுருகன் என்பவர் ஒர்க்ஷாப்கடையும், சந்திரன் என்பவர் பெட்டிக்கடையும், கருப்பையா என்பவர் இரும்பு கடையும் நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வழக்கம் போல் நேற்று இரவு கடைகளை பூட்டி சென்று விட்டு இன்று காலையில் கடை திறக்க வந்தனர். அப்போது பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஜஹாங்கீர் கடையில் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. அதேபோல் மற்ற கடைகளிலும் பொருட்கள், கல்லாவில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் தடவியல் நிபுணர்கள் வந்து பரிசோதனை செய்து ஆய்வு செய்தனர்.

    ஒரே வணிக வளாகத்தில் அடுத்தடுத்து கடைகளை உடைத்து திருடப்பட்ட சம்பவம் மேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவு மேலூர் மெயின் ரோட்டில் உள்ள செல்போன் ரீசார்ஜ் கடை, பலசரக்கு கடை இன்சூரன்ஸ் கம்பெனி, பெட்டிக்கடை ஆகிய கடைகளிலும் பொருட்கள் திருடு போய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    4 கடைகளிலும் நடந்த கொள்ளை தொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×