என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டையில் தெரு நாய் கடித்து 4 சிறுவர்கள் படுகாயம்
Byமாலை மலர்23 Sep 2021 6:28 AM GMT (Updated: 23 Sep 2021 6:28 AM GMT)
தெரு நாய் கடித்து பலத்த காயமடைந்த சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை நகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் மாடு ஆடுகளை கடித்து வந்தது.
கீழ குடியிருப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ரமேஷ் மகன் தஸ்வின் (வயது 5), குழந்தைச்சாமி மகன் கவுசிக் ராஜா (5), செல்லத்துரை மகன் கோகுல் (5), செந்தில்குமார் மகன் குரு சிவா (6) ஆகிய 4 பள்ளி மாணவர்களை தெரு நாய் கை, கால், இடுப்பு, தொடை பகுதியில் கடித்து குதறியது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று நாய்களை அடித்து விரட்டி குழந்தைகளை காப்பாற்றினர். பலத்த காயமடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் சிறிது நேரத்தில் குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் நாய்கள் கடித்து குதறி விபரீதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தனர்.
தேவகோட்டை நகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் மாடு ஆடுகளை கடித்து வந்தது.
கீழ குடியிருப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ரமேஷ் மகன் தஸ்வின் (வயது 5), குழந்தைச்சாமி மகன் கவுசிக் ராஜா (5), செல்லத்துரை மகன் கோகுல் (5), செந்தில்குமார் மகன் குரு சிவா (6) ஆகிய 4 பள்ளி மாணவர்களை தெரு நாய் கை, கால், இடுப்பு, தொடை பகுதியில் கடித்து குதறியது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று நாய்களை அடித்து விரட்டி குழந்தைகளை காப்பாற்றினர். பலத்த காயமடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் சிறிது நேரத்தில் குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் நாய்கள் கடித்து குதறி விபரீதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X