search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
    X
    கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

    தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடக்கம்

    கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி தொடக்க விழா நடைபெற்றது.

    கொரோனா தடுப்பூசி

    இந்த விழா வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.



    Next Story
    ×