search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூரில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சுற்றும் கொரோனா நோயாளிகள்

    கொரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சுற்றி வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி, பெண்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் பெண்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அடிக்கடி வெளியே வந்து டீ, காபி சாப்பிடுவது, டிபன் வாங்கி செல்வது மாலை வேளைகளில் ஆஸ்பத்திரிக்கு வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டு உள்ளனர்.

    கொரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சுற்றி வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அங்கு பழக்கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

    ஆஸ்பத்திரி நிர்வாகம் கொரோனா பாதித்த நோயாளிகளை ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வராதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் தொற்று பாதித்த நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வெளியே சுற்றி வரும் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×