என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சட்டசபை தேர்தலையொட்டி பணம் கடத்தலை தடுக்க வேலூர்- ஆந்திர எல்லையில் 9 சோதனை சாவடிகள்
வேலூர்:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தையொட்டி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உள்ளது. சித்தூர் மாவட்டத்துடன் சுமார் 65 கி.மீ தொலைவு எல்லை வேலூர் மாவட்டத்துடன் இணைந்துள்ளது.
எனவே, 2 மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான தேர்தல் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), ஹரிநாராயணன் (சித்தூர்), போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), செந்தில்குமார் (சித்தூர்), உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரவுடிகள் சித்தூர் மாவட்டத்தில் தஞ்சமடைவார்கள் என்பதால் அவர்களை கைது செய்யவும், தமிழக எல்லைக்குள் கள்ளச்சாராயம் எடுத்து வருவதை தவிர்க்கவும், இரு மாநிலங்களில் குற்றவாளிகள் மீதான நிலுவையில் கோர்ட்டு கைது ஆணைகளை நடைமுறைப்படுத்தவும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பணப் பரிமாற்றத்தை தடுக்க அதிகளவில் சோதனை நடத்தவும் ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது:-
‘‘ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் எல்லை மட்டும் தமிழகத்துடன் சுமார் 120 கி.மீ தொலைவுக்கு உள்ளது. இதில், 65 கி.மீ தொலைவு வேலூர் மாவட்டத்துடன் தொடர்புடையது. தற்போது 6 சோதனைச் சாவடிகள் உள்ளன. கூடுதலாக 3 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 9 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மேலும், சித்தூர் மாவட்டத்தில் இருந்து 15 வழித்தடங்கள் வேலூர் மாவட்டத்துடன் தொடர்பில் உள்ளது. அங்கெல்லாம் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
இதற்காக இரு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்று ஏற்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இது தொடர்பாக வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
2 மாவட்டங்கள் இடையில் கஞ்சா கடத்தல், கள்ளச்சாராயம், மதுபாட்டில் கடத்தல், பணம் பதுக்கலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குற்றவாளிகள் எல்லை தாண்டி வருவதை கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
2 மாவட்ட அதிகாரிகள் மத்தியில் உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ளப்படும். சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கப்படும்.
வேலூர், சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப்பகுதி வழியாக சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்