search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கோபி:

    கோபி அடுத்த கொரவம் பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது.

    உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் டி.ஆர்.பி. தேர்வு எழுதுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×