என் மலர்
செய்திகள்

திமுக
காங். கூட்டணி ஆலோசனைக்கூட்டம்- திமுக தொடர்ந்து புறக்கணிப்பு
மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. வரும் சட்டமன்ற தேர்தலை அந்த கூட்டணியில் நீடித்து சந்திக்க விரும்பவில்லை.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி தனித்தோ, மாற்று கூட்டணி அமைத்தோ போட்டியிட விரும்புகின்றனர். இதனால் காங்கிரஸ் கூட்டணி கவர்னருக்கு எதிராக நடத்திய ஆலோசனைக்கூட்டம், தர்ணா போராட்டம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவற்றை புறக்கணித்தனர்.
மேலும் தங்கள் கருத்தை கட்சி தலைமையிடமும் தெரிவித்தனர்.
இதற்கேற்ப கடந்த மாதம் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புதுவை மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு செயல் வீரர்கள் கூட்டமும் நடத்தினார். இதனிடையே கூட்டணியில் குழப்பம் இல்லை, கட்சியை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் காங்கிரசோடு இணைந்து புதுவை தி.மு.க.வினர் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தனித்து செயல்படுகின்றனர்.
சமீபத்தில், கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்து விட்டார். இந்நிலையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால் தி.மு.க. இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து புதுவை தி.மு.க.வினர் காங்கிரசை புறக்கணித்து வருகின்றனர்.
புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. வரும் சட்டமன்ற தேர்தலை அந்த கூட்டணியில் நீடித்து சந்திக்க விரும்பவில்லை.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி தனித்தோ, மாற்று கூட்டணி அமைத்தோ போட்டியிட விரும்புகின்றனர். இதனால் காங்கிரஸ் கூட்டணி கவர்னருக்கு எதிராக நடத்திய ஆலோசனைக்கூட்டம், தர்ணா போராட்டம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவற்றை புறக்கணித்தனர்.
மேலும் தங்கள் கருத்தை கட்சி தலைமையிடமும் தெரிவித்தனர்.
இதற்கேற்ப கடந்த மாதம் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புதுவை மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு செயல் வீரர்கள் கூட்டமும் நடத்தினார். இதனிடையே கூட்டணியில் குழப்பம் இல்லை, கட்சியை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் காங்கிரசோடு இணைந்து புதுவை தி.மு.க.வினர் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தனித்து செயல்படுகின்றனர்.
சமீபத்தில், கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்து விட்டார். இந்நிலையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால் தி.மு.க. இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து புதுவை தி.மு.க.வினர் காங்கிரசை புறக்கணித்து வருகின்றனர்.
Next Story






