என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்- எடப்பாடி பழனிசாமி
By
மாலை மலர்7 Jan 2021 10:11 AM GMT (Updated: 7 Jan 2021 10:11 AM GMT)

பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று மாநகர் மாவட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னதாக கருங்கல்பாளையம் காவிரி கரையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையை அசைத்தார். பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அம்மா மறைவிற்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகும், அம்மா குறிப்பிட்டதுபோல எனக்கு பின்னால் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வாழையடிவாழையாக நின்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள்.
வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய்பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வருகிறார். அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர்கள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. எண்ணற்ற திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் 6 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு 1 மருத்துவர், 1 செவிலியர், உதவியாளர் இருப்பார்கள். ஏழை எளியோர்களுக்கு தேவையான சிகிச்சை இங்கு அளிக்கப்படும். மேல்சிகிச்சை தேவைப்படுவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நாடே போற்றும் இந்த திட்டத்தை ஒருவர் மட்டும் குறை கூறுகிறார். என்ன குறைபாடை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் அம்மா மினிகிளினிக் டாக்டர்களிடம் சோதனை செய்து கொள்ளலாம்.
2 ஆயிரம் மினிகிளினிக்குகள் திறந்து இந்த அரசு சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெறும் 6 மாணவர்களுக்கு மட்டும் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதாலும் அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும். இதற்காகதான் இந்த அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீடை சட்டமாக இயற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்த ஆண்டில் 313 அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மேலும் 11 மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு மேலும் கூடுதலாக 130 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்று கொள்ளும். இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி உள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது. 1850 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக ரூ.62 கோடியில் தரம் உயர்த்தி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.250 கோடியில் நடைபெற்று வருகிறது. தற்போது 2-வது கட்டமாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
ஈரோடு மாநகர் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் பூமிக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.52 கோடி மதிப்பில் ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
ஈரோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டமான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் ரூ.484 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 98 சதவீதம் நடைபெற்று முடிந்து விட்டது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் நானே இங்கு வந்து நேரடியாக குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பேன்.
இந்த திட்டம் மூலம் 90 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கிடைக்கும். இவ்வாறாக பல திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது.
தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் (மக்கள்) சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒருவர் தவறு செய்தால் அவர் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று தமிழகம் சட்ட ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்த பொதுமக்களுக்காக 8 மாதம் ரேசன் கடையில் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 கிலோ அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு தூணாக இருந்து மக்களை காத்த ஒரே அரசு அம்மா அரசு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். தை பொங்கலையொட்டி அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம், சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து இந்த அரசு மக்களுக்கு செய்து வருகிறது. சுய உதவி குழுவினருக்கு 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ.8 ஆயிரம் கோடி தான் கடன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது 1 கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் அம்மா அரசு கடன் உதவி வழங்கியுள்ளது.
இந்த அரசு பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை, நீர்மேலாண்மை, மின்மிகை மாநிலம், கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.
தி.மு.க. ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் 1 விருது கூட பெற முடியவில்லை.
சாயப்பட்டறை கழிவு நீர் அமைக்க 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி உதவிக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆறு சுத்தமாக இருக்க பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றுள்ளது.
நீர் மேலாண்மை, கல்வி உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தற்போது 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகத்தில் தான் அதிகம்பேர் படித்து வருகிறார்கள். இது ஸ்டாலினுக்கு தெரியாது.
மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய். பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும்.
இரவு, பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த பாசறை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்று தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அங்கு இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று மாநகர் மாவட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னதாக கருங்கல்பாளையம் காவிரி கரையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையை அசைத்தார். பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அம்மா மறைவிற்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகும், அம்மா குறிப்பிட்டதுபோல எனக்கு பின்னால் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வாழையடிவாழையாக நின்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள்.
வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய்பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வருகிறார். அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர்கள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. எண்ணற்ற திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் 6 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு 1 மருத்துவர், 1 செவிலியர், உதவியாளர் இருப்பார்கள். ஏழை எளியோர்களுக்கு தேவையான சிகிச்சை இங்கு அளிக்கப்படும். மேல்சிகிச்சை தேவைப்படுவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நாடே போற்றும் இந்த திட்டத்தை ஒருவர் மட்டும் குறை கூறுகிறார். என்ன குறைபாடை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் அம்மா மினிகிளினிக் டாக்டர்களிடம் சோதனை செய்து கொள்ளலாம்.
2 ஆயிரம் மினிகிளினிக்குகள் திறந்து இந்த அரசு சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெறும் 6 மாணவர்களுக்கு மட்டும் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதாலும் அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும். இதற்காகதான் இந்த அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீடை சட்டமாக இயற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்த ஆண்டில் 313 அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மேலும் 11 மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு மேலும் கூடுதலாக 130 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்று கொள்ளும். இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி உள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது. 1850 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக ரூ.62 கோடியில் தரம் உயர்த்தி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.250 கோடியில் நடைபெற்று வருகிறது. தற்போது 2-வது கட்டமாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
ஈரோடு மாநகர் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் பூமிக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.52 கோடி மதிப்பில் ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
ஈரோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டமான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் ரூ.484 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 98 சதவீதம் நடைபெற்று முடிந்து விட்டது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் நானே இங்கு வந்து நேரடியாக குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பேன்.
இந்த திட்டம் மூலம் 90 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கிடைக்கும். இவ்வாறாக பல திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது.
தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் (மக்கள்) சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒருவர் தவறு செய்தால் அவர் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று தமிழகம் சட்ட ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்த பொதுமக்களுக்காக 8 மாதம் ரேசன் கடையில் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 கிலோ அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு தூணாக இருந்து மக்களை காத்த ஒரே அரசு அம்மா அரசு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். தை பொங்கலையொட்டி அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம், சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து இந்த அரசு மக்களுக்கு செய்து வருகிறது. சுய உதவி குழுவினருக்கு 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ.8 ஆயிரம் கோடி தான் கடன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது 1 கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் அம்மா அரசு கடன் உதவி வழங்கியுள்ளது.
இந்த அரசு பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை, நீர்மேலாண்மை, மின்மிகை மாநிலம், கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.
தி.மு.க. ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் 1 விருது கூட பெற முடியவில்லை.
சாயப்பட்டறை கழிவு நீர் அமைக்க 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி உதவிக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆறு சுத்தமாக இருக்க பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றுள்ளது.
நீர் மேலாண்மை, கல்வி உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தற்போது 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகத்தில் தான் அதிகம்பேர் படித்து வருகிறார்கள். இது ஸ்டாலினுக்கு தெரியாது.
மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய். பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும்.
இரவு, பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த பாசறை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்று தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அங்கு இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
