என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்10 Dec 2020 3:08 PM GMT (Updated: 10 Dec 2020 3:08 PM GMT)
தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கற்பழித்து 5 மாத கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்
இந்த நிலையில் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடியை அடுத்த பி.குயிலம் கிராமத்தை சேர்ந்த மாணவியின் உறவினர் கணேசன் (வயது 23) என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்துள்ளார். இதனை மாணவி பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்
நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச்சென்று பரிசோதித்தபோது மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது கணேசன் தன்னை தொடர்ந்து கற்பழித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தாயார் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கணேசனை கைது செய்து, தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X