என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்6 Dec 2020 4:57 AM GMT (Updated: 6 Dec 2020 4:57 AM GMT)
பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு வாழும் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலி குடிநீர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசும் நிலை இருந்தது. இதனால் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் நாளை(திங்கட்கிழமை) முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகையான குடிநீர் பாட்டில்களை(5 லிட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள குடிநீர் பாட்டில்கள் தவிர) விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்த்து, குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X