என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளத்தில் குட்டிகளை காப்பாற்றிய நாய்
Byமாலை மலர்28 Nov 2020 4:28 AM GMT (Updated: 28 Nov 2020 4:28 AM GMT)
8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு தூக்கிச் சென்றது.
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இரு பாலாற்று பாலங்களுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வந்தன. நிவர் புயலால் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்து வந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின.
இந்த நிலையில் 8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு தூக்கிச் சென்றது. அப்போது மழை வெள்ளம் நாயை சிறிது தூரம் இழுத்துச் சென்றது. எனினும் அதை பொருட்படுத்தாமல் துணிந்து, தனது குட்டிகளை காப்பாற்றியது. ஆனால் அந்த நாயால் 5 குட்டிகளை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மீதம் உள்ள 3 குட்டிகளும் ஆற்றின் நடுப்பகுதியில் பாலத்தின் கீழே தவித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறங்கி 3 நாய்களையும் மீட்டனர். நாயின் பாசத்தையும், தீயணைப்பு வீரர்களின் செயலையும் பொதுமக்கள் கண்டு வியந்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இரு பாலாற்று பாலங்களுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வந்தன. நிவர் புயலால் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்து வந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின.
இந்த நிலையில் 8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு தூக்கிச் சென்றது. அப்போது மழை வெள்ளம் நாயை சிறிது தூரம் இழுத்துச் சென்றது. எனினும் அதை பொருட்படுத்தாமல் துணிந்து, தனது குட்டிகளை காப்பாற்றியது. ஆனால் அந்த நாயால் 5 குட்டிகளை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மீதம் உள்ள 3 குட்டிகளும் ஆற்றின் நடுப்பகுதியில் பாலத்தின் கீழே தவித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறங்கி 3 நாய்களையும் மீட்டனர். நாயின் பாசத்தையும், தீயணைப்பு வீரர்களின் செயலையும் பொதுமக்கள் கண்டு வியந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X