என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு- தனியார் தோட்டத்தில் புதைத்த 3 பேர் கைது
Byமாலை மலர்20 Oct 2020 10:41 AM GMT (Updated: 20 Oct 2020 10:41 AM GMT)
உதகை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையை யாருக்கும் தெரியாமல் தனியார் தோட்டத்தில் புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உதகை:
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சின்ன குன்னூரை பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த தோட்ட உரிமையாளர் இறந்த ஆண் யானையின் உடலை அங்கேயே யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில் விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதைக்கபட்ட யானையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சின்ன குன்னூரை பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த தோட்ட உரிமையாளர் இறந்த ஆண் யானையின் உடலை அங்கேயே யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில் விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதைக்கபட்ட யானையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X