என் மலர்
செய்திகள்

கைது
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு- தனியார் தோட்டத்தில் புதைத்த 3 பேர் கைது
உதகை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையை யாருக்கும் தெரியாமல் தனியார் தோட்டத்தில் புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உதகை:
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சின்ன குன்னூரை பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த தோட்ட உரிமையாளர் இறந்த ஆண் யானையின் உடலை அங்கேயே யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில் விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதைக்கபட்ட யானையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சின்ன குன்னூரை பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த தோட்ட உரிமையாளர் இறந்த ஆண் யானையின் உடலை அங்கேயே யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில் விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதைக்கபட்ட யானையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story






