search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேலியா மலர்கள் பூத்து குலுங்குவதை காணலாம்
    X
    டேலியா மலர்கள் பூத்து குலுங்குவதை காணலாம்

    ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    ஊட்டி, கொடைக்கானலில் 6 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலம் திறக்கப்பட்டுள்ளதால் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையே தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொது பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள் இன்று முதல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டது.

    சுமார் 6 மாதங்களுக்கு பின் சுற்றுலா தலம் திறக்கப்பட்டதால் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வெளிமாவட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

    நீலகிரியில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரிப் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×