என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆலங்குளம் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய 6 பேர் கைது
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் சீதபற்பநல்லூர் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த 2 கார்கள், ஒரு லோடு ஆட்டோ ஆகியவற்றை நிறுத்தினர். பின்னர் அந்த வாகனங்களில் இருந்த 6 பேரிடம் விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனங்களை சோதனை செய்தபோது அதில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனால் 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த மூக்காண்டி (வயது 48), பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வம் (30), பேட்டையை சேர்ந்த செய்யது அலி (42), காசிம்மைதீன் (40), அப்துல் ரகீம் (27), ஜின்னா (28) என்பதும், அவர்கள் பேட்டை பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ரேசன் அரிசி கடத்திய 6 பேரையும் கைது செய்து நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்