search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
    X
    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

    அனைத்து கிராமங்களிலும் கபசுர குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி பகுதியில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கோட்டா ஹால், மிஷன் காம்பவுண்ட், டானிங்டன் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கு கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்க வேண்டும் எனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு பிளச்சிங் பவுடர் வழங்கவும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஜெகதளா ஊராட்சிக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிறப்பு கண்காணிப்பு அலுவலர் உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×