என் மலர்
செய்திகள்

அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
கடத்தூர்:
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். எஞ்சியுள்ள மாணவர்களும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கும் தேர்வு நடத்திட அரசு தயாராக உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் சேவைகளை போன்று, பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கும் வகையில் தற்போதைய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் உள்ளதால் பெற்றோர்களின் கருத்து அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை பெற்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். எஞ்சியுள்ள மாணவர்களும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கும் தேர்வு நடத்திட அரசு தயாராக உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் சேவைகளை போன்று, பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கும் வகையில் தற்போதைய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் உள்ளதால் பெற்றோர்களின் கருத்து அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை பெற்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






