என் மலர்
செய்திகள்

கொலை
ஈரோட்டில் சாய பட்டறை தொழிலாளி தலை துண்டித்து படுகொலை
ஈரோட்டில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சாய பட்டறை தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூளை நெசவாளர் காலனி லட்சுமி நகரில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் பாலத்தில் நேற்று இரவு 11 மணிஅளவில் ஒரு வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக ஈரோடு கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால முருகன், பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பாலத்தின் ஒரு தூணில் ரத்தக்கறையுடன் வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வீதிகளை கடந்து ஓடை கரையோரமாக உடல் கிடந்தது.
அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிந்த நிலையில் தலையில்லாமல் உடல் கிடந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் ரத்தக்கறையும் படிந்து கிடந்தது. அதைத்தொடர்ந்து உடலையும், தலையையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த ரத்தக்கறையை முகர்ந்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
கொலை நடந்தது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணையில் கொலையுண்டவரின் அடையாளமும் கொலைக்கான காரணமும் தெரிய வந்தது. சேலம் மாவட்டம் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 24) இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து அங்கே தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரித்திவிராஜ் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சூளை நெசவாளர் காலனி அருகே உள்ள ஓடை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த அவரது நண்பர் மற்றொருவர் இங்கு மது அருந்த கூடாது வேறு எங்கேயோ சென்று அருந்துகள் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நண்பர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் பிரிதிவிராஜ் அவரது நண்பர்கள் சிறிது நேரம் கழித்து அந்த நண்பர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நண்பர் கட்டையால் பிரிதிவிராஜை தாக்கியுள்ளார். இதில் பிரித்திவிராஜ் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடன் வந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். எனினும் ஆத்திரம் தீராத அவர் பிரித்திவிராஜ் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அந்த தலையை ஓடை பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சூளை நெசவாளர் காலனி லட்சுமி நகரில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் பாலத்தில் நேற்று இரவு 11 மணிஅளவில் ஒரு வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக ஈரோடு கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால முருகன், பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பாலத்தின் ஒரு தூணில் ரத்தக்கறையுடன் வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வீதிகளை கடந்து ஓடை கரையோரமாக உடல் கிடந்தது.
அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிந்த நிலையில் தலையில்லாமல் உடல் கிடந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் ரத்தக்கறையும் படிந்து கிடந்தது. அதைத்தொடர்ந்து உடலையும், தலையையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த ரத்தக்கறையை முகர்ந்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
கொலை நடந்தது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணையில் கொலையுண்டவரின் அடையாளமும் கொலைக்கான காரணமும் தெரிய வந்தது. சேலம் மாவட்டம் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 24) இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து அங்கே தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரித்திவிராஜ் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சூளை நெசவாளர் காலனி அருகே உள்ள ஓடை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த அவரது நண்பர் மற்றொருவர் இங்கு மது அருந்த கூடாது வேறு எங்கேயோ சென்று அருந்துகள் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நண்பர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் பிரிதிவிராஜ் அவரது நண்பர்கள் சிறிது நேரம் கழித்து அந்த நண்பர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நண்பர் கட்டையால் பிரிதிவிராஜை தாக்கியுள்ளார். இதில் பிரித்திவிராஜ் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடன் வந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். எனினும் ஆத்திரம் தீராத அவர் பிரித்திவிராஜ் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அந்த தலையை ஓடை பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






