என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தற்கொலை
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் உறவினர் தற்கொலை
By
மாலை மலர்29 Feb 2020 9:35 AM GMT (Updated: 29 Feb 2020 9:35 AM GMT)

கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் மகன் முகுந்தன். இவர் கோவை கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் திவ்யாவை திருமணம் செய்தார்.
திவ்யாவின் தம்பி சண்முகநாதன் (வயது 25). இவர் கோவை காந்திபுரத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற குடும்பத்தார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சண்முகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகநாதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று மாலை கோவைக்கு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் மகன் முகுந்தன். இவர் கோவை கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் திவ்யாவை திருமணம் செய்தார்.
திவ்யாவின் தம்பி சண்முகநாதன் (வயது 25). இவர் கோவை காந்திபுரத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற குடும்பத்தார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சண்முகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகநாதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று மாலை கோவைக்கு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
