என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் விசாரணை
    X
    போலீஸ் விசாரணை

    வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் காரில் மோதுவதுபோல் வந்த நபர்கள்- போலீஸ் விசாரணை

    வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் சென்ற காரின் மீது மோதுவது போல் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    இந்து முன்னணியின் வேலூர் கோட்டதலைவராக உள்ளவர் மகேஷ். இவருக்கு அதிக கொலை மிரட்டல்கள் வந்தது. மேலும் கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் 24 மணி நேரமும் இவருக்கு பாதுகாப்பு அளிக்க துப்பாக்கி எந்திய 2 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

    மகேஷ், இந்து முன்னணி இயக்கம் தொடர்பான பணிக்கு பல்வேறு இடங்களுக்கு காரில் செல்வார். அவர்களுடன் அந்த போலீஸ்காரர்களும் பாதுகாப்புக்காக செல்வார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அவர் வேலூர் நேதாஜி மார்கெட்பகுதியில் காரில் சென்றார். அப்போது அங்கு அவரது காரில் மோதுவது போன்று மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மீது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மகேஷ் மீதான தாக்குதலுக்காக அவர்கள் வந்திருக்கலாம் என கருதி போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது போலீஸ்காரர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் அதிக அளவிலான மக்கள் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மகேஷ், போலீசாரையும் அழைத்துச் சென்றார். எனினும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர்கள் மார்க்கெட் பகுதியில் வேலைபார்ப்பது தெரியவந்தது. எதிர்பாராத விதமாக சம்பவம் நடந்ததாக கூறினார். இதனையடுத்து வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

    Next Story
    ×