என் மலர்
செய்திகள்

சேத்தியாதோப்பு அருகே வாலிபர் அடித்து கொலை?
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே கீரப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூந்தோட்டம் கிராமம்.
இங்குள்ள வண்ணான் மதகு அருகே வயல்வெளி பகுதியில் சுமார் 38 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அப்போது வயல் அறுவடைக்கு வந்த தொழிலாளர்கள் இந்த வாலிபரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் அபுஇப்ராகீம் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது. எனவே அவரை யாரோ அடித்து கொன்று உள்ளனர். பின்னர் கழுத்தில் கயிறை கட்டி இழுத்து வயல் வெளியில் உள்ள மின்கம்பம் பகுதியில் உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் சேத்தியாதோப்பு அருகே உள்ள சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது.
இவரை அடித்து கொன்றவர்கள் யார்? எதற்காக அடித்து கொன்றனர்? கொலையாளிகள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






