என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசு மீது அமைச்சர் கருப்பணன் திடீர் குற்றச்சாட்டு
Byமாலை மலர்1 Feb 2020 2:31 PM GMT (Updated: 1 Feb 2020 2:31 PM GMT)
மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு இந்த திட்டத்துக்கு மாநில அரசிடம் அனுமதி கேட்கவில்லை என அமைச்சர் கருப்பணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
விழாவில் 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 603 மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் இலவச மடிகணினிகளை வழங்கி பேசினார்.
அவர் கூறும்போது, மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு மாநில அரசிடம் மத்திய அரசு அனுமதி கேட்கவில்லை. அனுமதி கேட்காவிட்டாலும் கூட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடமாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதியும் பெறவில்லை.
ஈரோடு, பவானியில் பொதுசுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது. 500 டி.டி.எஸ்.சுக்கு மேல் இருக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யத்தான் இந்த பொதுசுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது” என்று கூறினார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
விழாவில் 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 603 மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் இலவச மடிகணினிகளை வழங்கி பேசினார்.
அவர் கூறும்போது, மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு மாநில அரசிடம் மத்திய அரசு அனுமதி கேட்கவில்லை. அனுமதி கேட்காவிட்டாலும் கூட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடமாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதியும் பெறவில்லை.
ஈரோடு, பவானியில் பொதுசுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது. 500 டி.டி.எஸ்.சுக்கு மேல் இருக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யத்தான் இந்த பொதுசுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது” என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X