என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எங்களை தேடினால் வேறுமாதிரி முடிவை எடுப்போம் - கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பம்
Byமாலை மலர்31 Dec 2019 11:38 AM GMT (Updated: 31 Dec 2019 11:38 AM GMT)
நகைகளை மீட்க முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த மொடச்சூரை சேர்ந்தவர் யஷ்ணன் (வயது 32). மருந்து பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பெயர் ரிஜானா (வயது 26). 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.
யஷ்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் மகன் 3 பேரும் திடீரென மாயமானார்கள்.
மேலும் அவர்க் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர்.
அந்த கடிதத்தில் “எங்களை யாரும் தேட வேண்டாம். கடன்-நகைகளை மீட்க முடியாததால் நாங்கள் வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்கிறோம்.
எங்களை தேட எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் அப்படி தேடினால் நாங்கள் வேறு மாதிரி முடிவு எடுப்போம்“ என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த மொடச்சூரை சேர்ந்தவர் யஷ்ணன் (வயது 32). மருந்து பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பெயர் ரிஜானா (வயது 26). 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.
யஷ்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் மகன் 3 பேரும் திடீரென மாயமானார்கள்.
மேலும் அவர்க் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர்.
அந்த கடிதத்தில் “எங்களை யாரும் தேட வேண்டாம். கடன்-நகைகளை மீட்க முடியாததால் நாங்கள் வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்கிறோம்.
எங்களை தேட எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் அப்படி தேடினால் நாங்கள் வேறு மாதிரி முடிவு எடுப்போம்“ என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X