search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளிய மரத்தில் மோதிய அரசு பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர்.
    X
    புளிய மரத்தில் மோதிய அரசு பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர்.

    வேப்பூர் அருகே அரசு பஸ் புளியமரத்தில் மோதல்- நகைகடை அதிபர் பலி

    வேப்பூர் அருகே நள்ளிரவில் அரசு பஸ் புளியமரத்தில் மோதிய விபத்தில் நகைகடை அதிபர் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 11 மணிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அந்த பஸ் இரவு 12 மணி அளவில் வேப்பூர் அருகே அடரி என்ற கிராமத்தில் கடலூர்- சேலம் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பின்பு அந்த பஸ் சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர்.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்த கோவிந்தராஜ் (வயது 55). என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இவர் சேலத்தில் நகை கடை வைத்துள்ளார்.

    மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் காயம் அடைந்த 20 பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புளிய மரத்தில் மோதிய அரசு பஸ்சை கிரேன் மூலம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×