என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் பயணம் - வேன் மோதி பெண் உள்பட 3 பேர் பலி
Byமாலை மலர்20 Nov 2019 7:21 AM GMT (Updated: 20 Nov 2019 7:21 AM GMT)
மாமல்லபுரம் அருகே ஒரே மோட்டார்சைக்கிளில் 4 பேர் பயணம் செய்த போது வேன் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
மாமல்லபுரம்:
சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் டில்லி (வயது19), மோகனா (15).
நேற்று இரவு அவர்கள் மேலும் 2 வாலிபர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றனர்.
அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் கேனில் பெட்ரோல் வாங்கினர். பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க திரும்பினர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற டெம்போ வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டில்லி, மோகனா உள்பட 4 பேரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே டில்லி, மோகனா மற்றும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தனர்.
உடன் வந்த மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வாலிபருக்கு சென்னை அரச ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான மற்றொருவர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியானவர்கள் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றதால் அவர்களது மற்றொரு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் எங்கேனும் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்கேனும் கேட்பாரற்று மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக டெம்போ வேன் டிரைவர் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் டில்லி (வயது19), மோகனா (15).
நேற்று இரவு அவர்கள் மேலும் 2 வாலிபர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றனர்.
அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் கேனில் பெட்ரோல் வாங்கினர். பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க திரும்பினர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற டெம்போ வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டில்லி, மோகனா உள்பட 4 பேரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே டில்லி, மோகனா மற்றும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தனர்.
உடன் வந்த மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வாலிபருக்கு சென்னை அரச ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான மற்றொருவர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியானவர்கள் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றதால் அவர்களது மற்றொரு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் எங்கேனும் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்கேனும் கேட்பாரற்று மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக டெம்போ வேன் டிரைவர் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X