search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் உள்பட 3 பேர் கைது

    காட்டுமன்னார்கோவில் அருகே இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது17) இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவருக்கும், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விசித்ரா(17) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்தநிலையில் மாதவன் தனது நண்பர்களான நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விக்னேஷ்(19), சூர்யபிரகாஷ்(21) ஆகியோரிடம் தான் நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விசித்ரா என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதவன் தனது காதலி விசித்ராவை அங்குள்ள ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்தார்.

    இந்த விவரம் அறிந்த மாதவனின் நண்பர்கள் விக்னேஷ், சூர்யபிரகாஷ் ஆகியோரும் ஆற்றங்கரை பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த விசித்ராவை மிரட்டி அவர்கள் இருவரும் கற்பழித்தனர்.

    அதன்பின்பு மாதவன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதனைத்தொடர்ந்து விசித்ரா அழுதுகொண்டு வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் இருந்த அண்ணன் மற்றும் தந்தையிடம் நடந்த விபரத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து விசித்ராவின் அண்ணன் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விசித்ராவை கற்பழித்த 3 பேரை பிடிக்க துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் விக்னேஷ், மாதவன், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரை இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதேபோல் சூர்யபிரகாசும் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×